திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தொழில் பாதை திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-01-05 22:53:36



திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தொழில் பாதை திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு தொழில் பாதை திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்ட மேலாளர் அலுவலகம் தாட்கோ சார்பாக 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ,மாணவியர்களுக்கு மெட்ராஸ் ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. மெட்ராஸ் ஐ.ஐ.டி உலகிலேயே முதல் முறையாக இளங்களை தரவு அறிவியலில் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதில் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம். ஜனவரி 2023ஆம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 08 ஜனவரி 2023, www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் சேர்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு மெட்ராஸ் ஐ.ஐ.டி மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. மேலும் திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மற்றும் மாணவர்களுக்கு ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்துக் கொண்டே ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் படிக்கலாம்.

தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு ஐ.ஐ.டி மெட்ராஸில் நேரடியான படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.

இதற்கான தகுதிகள் 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ,மாணவியர் இருக்க வேண்டும். மாணவ,மாணவியர்கள் தங்களது 12ஆம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தாட்கோவில் பதிவு செய்த மாணவ, மாணவியர்கள் மெட்ராஸ் ஐ.ஐ.டி நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.1,500 ஆகும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

மெட்ராஸ் ஐ.ஐ.டி நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, தேர்ச்சி பெற்றால் மெட்ராஸ் ஐ.ஐ.டி, வழங்கும் Bachelor of Science in Data Science & Application பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள். இப்படிப்பு பயில்வதற்கான செலவினை தாட்கோ கல்விக்கடன் மூலம் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.