திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

பதிவு:2023-01-05 22:56:28



திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பாக வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் ஜன 06 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடகரையில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு வருகிற 9.1.23 திங்கள்கிழமை அன்று மத்திய, மாநில அரசு நிறுவனங்கள்,தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகின்றது.

இம்முகாமில் தகுதியுடைய ஐடிஐ தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் என்.ஏ.சி சான்றிதழ் பெற்று பயனடையுமாறும், இது தொடர்பான விவரங்களை தெரிந்துக் கொள்ள திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது ricentreambattur@gmail.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது 9499055663, 9486939263 மற்றும் 9444139373 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தொழிற் பழகுநர் முகாமில் கலந்து கொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.