பதிவு:2023-01-07 17:08:29
தோட்டக்கலை துறை மூலமாக காளான் குடில் அமைக்க மானியம் : தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல் :
திருவள்ளூர் ஜன 06 : தோட்டக் கலைத்துறை மூலமாக காளான் குடில் அமைக்க மானியம் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஐ.ஜெபக்குமாரி அனி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இம்மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 80 கிராம ஊராட்சிகளில் 3எண்கள், 2022-23 ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 141 கிராம ஊராட்சிகளில் 4 எண்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக காளான் குடில் அமைக்க 50 சதவீத மானியமாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்திற்கு 7 காளான் குடில்கள் தலா 600 சதுர அடி பரப்பளவில் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகவும் அல்லது https://tnhorticulture. tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் இத்திட்டம் தொடர்பாக மேலும் அறிய 7010288845 , 9942659155 எண்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஐ.ஜெபக்குமாரி அனி தெரிவித்துள்ளார்