திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டுஅரசு மதுபானக் கடைகள் மூடப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :

பதிவு:2023-01-07 20:13:01



திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டுஅரசு மதுபானக் கடைகள் மூடப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :

திருவள்ளுர் மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம், குடியரசு தினத்தை முன்னிட்டுஅரசு மதுபானக் கடைகள் மூடப்படும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவு :

திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுக்கூடங்கள் அனைத்தும் வருகிற 16.01.2023 மற்றும் 26.01.2023 ஆகிய தினங்களில் கண்டிப்பாக மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :

தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் அனைத்தும் வரும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 16.01.2023 (திங்கள்கிழமை) மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 26.01.2023 (வியாழன்கிழமை) அன்றும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் ன திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உத்தரவை மீறி மதுக்கூடங்கள் திறப்போர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.