திருவள்ளூர் மாவட்டத்தில் 6,20,095 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை மற்றும் ரொக்க பணத்தினை பெற்றுக் கொள்ளலாம் : ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2023-01-07 20:30:05



திருவள்ளூர் மாவட்டத்தில் 6,20,095 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை மற்றும் ரொக்க பணத்தினை பெற்றுக் கொள்ளலாம் : ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் 6,20,095 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை மற்றும் ரொக்க பணத்தினை பெற்றுக் கொள்ளலாம் : ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் ஜன 07 : திருவள்ளூர் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 6,20,095 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 927 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகையும் ஒரே நேரத்தில் நியாய விலைகடைகளின் மூலமாக 09.01.2023 முதல் தொடங்கி 12.01.2023 தேதிக்குள் வழங்கப்படும்.

கூட்டநெரிசிலினை தவிர்க்கும் பொருட்டு ஒருநாளைக்கு சுமார் 200 முதல் 250 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கப்படும். அதன் விவரம் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்படும்.

பொங்கல் பரிசுதொகுப்பு மற்றும் ரொக்கப் பணத்தினை விற்பனை முனைய இயந்திரத்தின மூலம் கைரேகை சரிபார்ப்பு முறைப்படி வழங்கப்படும். அங்கீகாரச் சான்று வழங்கியதன் வாயிலாக அங்கீகரிக்கப்பட்ட நபர் மூலம் பொருட்கள் பெறும் அட்டைதாரர்களுக்குப் பதிவேட்டில் உரியநபர்களின் ஒப்பம் பெற்று பொங்கல் பரிசு வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்மந்தப்பட்ட தகவல், புகார் ஏதேனும் இருப்பின் திருவள்ளூர் 9445000177,திருத்தணி 9445000182,பள்ளிப்பட்டு 9445000183,பொன்னேரி 9445000178,கும்மிடிப்பூண்டி 9445000179,ஊத்துக்கோட்டை 8098479640,பூந்தமல்லி 9445000181,ஆவடி 9894939884, இரா.கி.பேட்டை 9786862419, மாவட்ட கட்டுப்பாட்டு அறை 044 - 27662400 என்ற வட்டம் வட்ட வழங்கல் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.