பதிவு:2023-01-11 12:03:21
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஜன 11 : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதனடிப்படையில் வரும் 13.01.2023 வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் காலை 10 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; நடைபெற உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பணியாட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார் துறையில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறும், இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்படமாட்டாது
கல்வித்தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.