பதிவு:2023-01-18 12:46:33
திருவள்ளூர் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன- மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள்,தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல், ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2023 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
2023-20224ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள்,கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம்) RTGS/ NEFT மூலம் செலுத்த வேண்டும், அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்.28.02.2023 ஆகும்.இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும்இ அங்கிகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் (தொலைபேசி எண்: 044-22501006(113) Email ID : detischennai@gmail.com) என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.