திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை :

பதிவு:2023-01-19 17:06:09



திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை :

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை :

திருவள்ளூர் ஜன 19 : 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில் தை மற்றும் சித்திரை என ஆண்டுக்கு இரு பிரம்மோற்சவம் நடைபெறும். தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவப் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. :

பிரம்மோற்சவம் விழா கடந்த 17 தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 3-ம் நாளான இன்று காலை உற்சவர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஐந்து மணிக்கு கோபுர தரிசனமும் 7 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது. :

இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து 5வது நாள் 21-ம் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான 23-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை திருத்தோ் திருவிழாவும், 10-ஆவது நாளான 26-ஆம் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கவும் உள்ளார்