பதிவு:2022-04-21 12:19:01
உதவி காவல் ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று முதல் இலவசப் பயிற்சி வகுப்பு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் ஏப் 21 : தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர் ஆண்,பெண் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவசப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைபேசி எண்ணுடன் உடன் தெரிவிக்க வேண்டும்.
இந்த பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 22.04.2022 (இன்று) முதல் நடைபெறும். மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் (044-27660250) தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்
தெரிவித்துள்ளார்.