தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என்று சொன்ன கவர்னருக்கு திருவள்ளூரில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பதிலடி கொடுப்பார் : திருவள்ளூரில் ஜெகத்ரட்சகன் எம்பி., பேச்சு :

பதிவு:2023-01-19 17:11:17



தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என்று சொன்ன கவர்னருக்கு திருவள்ளூரில் வருகிற 25-ந் தேதி நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பதிலடி கொடுப்பார் : திருவள்ளூரில் ஜெகத்ரட்சகன் எம்பி., பேச்சு :

தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என்று சொன்ன கவர்னருக்கு திருவள்ளூரில் வருகிற 25-ந் தேதி  நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பதிலடி கொடுப்பார் : திருவள்ளூரில் ஜெகத்ரட்சகன் எம்பி., பேச்சு :

திருவள்ளூர் ஜன 19 : திருவள்ளூரில் வருகிற 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதில்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். :

இதனால், முதலமைச்சர் வருகையின் போது எப்படி வரவேற்பு அளிப்பது, கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களை அழைத்துவருவது எப்படி என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. :

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு திருவள்ளூர் மத்திய மாவட்டதிமுக செயலாளரும், தமிழக பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜே.கோவிந்தராஜன் எம்எல்ஏ, வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார். :

இதில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் எம்பியும், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒரு மொழிக்காக போராடி தனது உடலை தீக்கிரையாக்கி உயிர் நீத்த இயக்கம் என்று சொன்னால் அது திராவிட முன்னேற்றக் கழகம் தான். அந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற 25-ந் தேதி திருவள்ளூருக்கு வருகை தர இருக்கிறார். சட்டசபையில் தமிழ்நாடு என்று சொல்லமாட்டேன் என்று சொன்ன கவர்னருக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை இருக்கிறது. இதற்கான பதிலை அன்று தமிழ்நாடு முதலமைச்சர் பதிலடி கொடுப்பார் என பேசினார். :

இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பேசும் போது, முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நிர்வாகிகளை கூட்டத்திற்கு அழைத்துவர பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏற்கனவே சிறப்பான கூட்டம் என தமிழ்நாடு முதலமைச்சர் கரூர் மாவட்டத்தை சொல்லி வரும் நிலையில் இனி 25-ந்தேதிக்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டம் என சொல்லும் அளவுக்கு நாம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். :

இதில் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ.க்கள் இ.ஏ.பி.சிவாஜி, சி.எச்.சேகர், திராவிட பக்தன், ஆர்.டி.இ.ஆதிசேஷன், ஓ.ஏ.நாகலிங்கம், பூவை ஜெரால்டு, காயத்ரி ஸ்ரீதரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் உமா மகேஸ்வரி, பிரபு கஜேந்திரன், வி.சி.ஆர்.குமரன், எல்லாபுரம் மூர்த்தி, உதயமலர் பொன் பாண்டியன், எம்.மிதுன் சக்கரவர்த்தி, நடுக்குத்தரை எம்.ராஜூ, நடுக்குத்தகை ரமேஷ் , ஜெயபாரதி, எஸ்.கே.ஆதாம், ரவீந்திர ரெட்டி, கே.எம்.சுப்பிரமணியன், கும்மிடிப்பூண்டி ரமேஷ், எத்திராஜ், ஜெயபால், சீனிவாசன், கதிரவன், அன்புவாணன், மற்றும் மாநகர, ஒன்றிய நகர, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் டி.கே.பாபு நன்றி கூறினார்.