திருவள்ளூர் மாவட்டத்தில் தாம்பரம் இந்திய விமானப்படை நிலையம் வாயிலாக மருத்துவ உதவியாளர் பதவி பணிக்காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-01-31 18:42:39



திருவள்ளூர் மாவட்டத்தில் தாம்பரம் இந்திய விமானப்படை நிலையம் வாயிலாக மருத்துவ உதவியாளர் பதவி பணிக்காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தாம்பரம் இந்திய விமானப்படை நிலையம் வாயிலாக மருத்துவ உதவியாளர் பதவி பணிக்காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு  முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  தகவல்

திருவள்ளூர் ஜன 31 : தாம்பரம் இந்திய விமானப்படை நிலையம் வாயிலாக 01.02.2023 முதல் 07.02.2023 வரை மருத்துவ உதவியாளர் பதவி பணிக்காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு விருப்பமுள்ள ஆண் வேலைநாடுநர்கள் விண்ணப்பித்து கலந்து கொள்ளலாம்.

இந்திய விமானப்படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில், ஏர்மேன் தேர்விற்கான முகாம் வரும் பிப்ரவரி 1 முதல் 7 வரை நடக்கிறது.இதில் அறிவியல் பிரிவில் பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். பிளஸ் 2 வகுப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். திருமணமாகாத இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2004-ஆம் தேதிக்குள்ளும்இ திருமணமான இளைஞர்கள் 27.06.1999 முதல் 27.06.2002-ஆம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 152.5 செ.மீ.இ உயரம் இருத்தல் வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகியோ அறிந்து கொள்ளலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.