திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் : பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2023-01-31 18:49:22



திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் : பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் : பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர் ஜன 31 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 66 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 56 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 57 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 64 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 78 மனுக்களும்; என மொத்தம் 321 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,050 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மற்றொரு மாற்றுத்திறனாளி சிறுவன் காதொலி கருவி வேண்டி விண்ணப்பித்த நிலையில், அம்மாற்றுத்திறனாளி சிறுவனின் கோரி;க்கையை உடனடியாக பரிசீலனை செய்து, அம்மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உடனடியாக ரூ.5,560 மதிப்பீட்டிலான இரண்டு காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவசமாக வழங்கினார். ஆக மொத்தம், ரூ.14,610 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.