திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்வி பயில்வதற்கு 22 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

பதிவு:2023-02-15 09:45:55



திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்வி பயில்வதற்கு 22 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உயர் கல்வி பயில்வதற்கு 22 மாணவ, மாணவிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 94 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 53 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 34 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 57 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 96 மனுக்களும் என மொத்தம் 334 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக திருத்தணி ஊராட்சி ஒன்றியம், சிறுகுமி கிராமத்தில் தெரு நாய்க்கடியால் 11 ஆட்டுக்குட்டிகள் மற்றும் 2 பெண் ஆடுகள் என மொத்தம் 13 ஆடுகளை இழந்த அதன் உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.15,000-த்திற்கான காசோலையையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக வில்லிவாக்கம் வட்டாரம், கதவூர் அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணியில் இருக்கும்போது உயிரிழந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வில்லிவாக்கம் வட்டாரத்தில் காலியாக உள்ள மோரை மையத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிநியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ரூ.8,75,000-ம் கடன் தொகை பெறப்பட்டதை தொடர்ந்து ரூ.2,33,332-த்திற்கான மானியத் தொகைக்கான காசோலைகளையும், ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் மற்றும் இந்திய எழுத்தறிவு திட்டம் இணைந்து ஏழை மாணவ – மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கு உதவுவதற்காக 22 மாணவ – மாணவியர்களுக்கு (19 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.2,85,000-ம்; மதிப்பீட்டிலும், 3 மாணவர்களுக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.15,000 மதிப்பீட்டிலும்) என ரூ.3 இலட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வி.எபினேசன் (வேளாண்மை), கா.காயத்திரி சுப்பிரமணி (பொது), ஐ.ஆர்.சி.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குநர் பி.ஸ்டீபன், பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி, முடநீக்கு வல்லுநர் ஆஷா, சைகை மொழி பெயர்ப்பாளர் சசிகலா, மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.