திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டு சாலையில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் எந்திரத்தில் உள்ள சிசிடிவி கேமராவுக்கு கருப்பு ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி : சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி., விசாரணை

பதிவு:2023-02-15 10:01:19



திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டு சாலையில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் எந்திரத்தில் உள்ள சிசிடிவி கேமராவுக்கு கருப்பு ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி : சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி., விசாரணை

திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டு சாலையில் உள்ள இந்தியா ஒன்  ஏடிஎம் எந்திரத்தில் உள்ள  சிசிடிவி கேமராவுக்கு கருப்பு ஸ்பிரே அடித்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி : சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி., விசாரணை

திருவள்ளூர் பிப் 14 : திருவள்ளூர் அருகே பூண்டி கூட்டுச் சாலையும் திருவள்ளூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் சாலையில் உள்ள இந்தியா ஒன் என்ற தனியார் ஏடிஎம் மையத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கேமரா மற்றும் ஏடிஎம் மையத்திற்கு மேலே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவிற்கு மர்ம நபர்கள் கருப்பு கலர் ஸ்பிரே அடித்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர், திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும் குற்றப்பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏ.டி.எம் மையங்களில் 75 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர்களுக்கும் தற்போது பூண்டி பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஸ்பிரே அடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தக் கொள்ளையர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா என என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஸ்பிரே அடிக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தில் பணம் ஏதும் திருடு போகவில்லை எனவும் சிசிடிவி கேமராவிற்கு ஸ்பிரே மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொள்ளையர்கள் ஆந்திராவிற்கு தப்பிச்செல்லும் வழியில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.