பதிவு:2023-03-03 21:39:23
திருத்தணி நகராட்சியில் மின் பணியாளராக பணிபுரிந்துவந்தவர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த பரிதாபம்
திருவள்ளூர் மார்ச் 03 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் மின் பணியாளராக பணி புரிந்து வந்தவர் நடராஜன் (54). இவர் இன்று வழக்கம் போல் காலை பணிக்கு வந்தவர் பாத்ரூமில் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து சக ஊழியர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடராஜன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் பணியின் போது மின் பணியாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.