திருத்தணி அருகே குசஸ்தலை ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு : அடித்துக் கொலையா என போலீசார் விசாரணை

பதிவு:2023-03-13 20:16:29



திருத்தணி அருகே குசஸ்தலை ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு : அடித்துக் கொலையா என போலீசார் விசாரணை

திருத்தணி அருகே குசஸ்தலை ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு : அடித்துக் கொலையா என போலீசார் விசாரணை

திருவள்ளூர் மார்ச் 13 : திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரம் அடுத்த புதூரில் உள்ள குசஸ்தலை ஆற்றின் வழியாக அப்பகுதி மக்கள் சென்றுள்ளனர். அப்போது அந்த ஆற்றில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் சடலமாக கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கனகம்மாசத்திரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆற்றில் சடலமாக கிடந்த இளைஞனுக்கு 30 வயது இருக்கும் என்றும், காலில் அணிந்திருந்த செருப்பு, பேண்ட் சட்டை எல்லாம் இருப்பதால் இது குறித்து கனகமாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.