திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்ச்சைக்காக சென்ற வழக்கறிஞருக்கும் பணியில் இருந்த காவலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சாலை மறியல் :

பதிவு:2023-03-17 19:46:45



திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்ச்சைக்காக சென்ற வழக்கறிஞருக்கும் பணியில் இருந்த காவலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து சாலை மறியல் :

திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்ச்சைக்காக சென்ற வழக்கறிஞருக்கும் பணியில் இருந்த காவலருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து  சாலை மறியல் :

திருவள்ளூர் மார்ச் 17 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வழக்கறிஞராக இருப்பவர் ஸ்ரீராமுலு. இவர் கடந்த 8-ந் தேதி காலில் அடிபட்டதால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவல் செல்வத்திற்கும் வழக்கறிஞர் ஸ்ரீராமுலுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி்யுள்ளது. இதில் காவலர் செல்வம் வழக்கறிஞர் ஸ்ரீராமுலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு தரப்பினரும் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திருத்தணியில் உள்ள 3 வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 3 நாட்களாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 4-வது நாளான இன்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன் துணைத் தலைவர் வி.ஆர்.ராம்குமார் தலைமையில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து திருத்தணி அரக்கோணம் சாலையில் 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரி நேரில் பேச்சு வார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்ததால் பரபரப்பாக காணப்பட்டது. இதனிடையே நீண்ட நேரம் சாலைமறியலில் ஈடுபட்டதால் பொது மக்கள் வழக்கறிஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து ஒரு மணி நேரம் கழித்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இரு தரப்பினரையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து வழக்கறிஞர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் திருத்தணி அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.