பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் ஊழியர் படுகாயம் : 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

பதிவு:2023-03-18 18:31:38



பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் ஊழியர் படுகாயம் : 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரத்தில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் ஊழியர் படுகாயம் : 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

திருவள்ளூர் மார்ச் 18 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் இயங்கி வருகிறது கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை.இந்த தொழிற்சாலையில் இரவு பணியில் இருந்த ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் மீது தொழிற்சாலையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் பேருந்து பின் பக்கமாக இயக்கும்போது மோதியது :

இதில் பலத்த காயம்அடைந்த கிஷோர் அருகிலுள்ள சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் விபத்துக்குள்ளான இளைஞர் கிஷோர் குறித்து தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் எந்த தகவலும் தெரிவிக்காததால் ஆத்திரம் அடைந்த சகத் தொழிலாளர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். :

விபத்துக்குள்ளான இளைஞர் கிஷோர் குறித்தும் அவருக்கு நீதி கேட்டும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து தகவல் அறிந்த மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொழிற்சாலை நிர்வாகத்தினரிடம் மற்றும் தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விபத்துக்குள்ளான கிஷோருக்கு மருத்துவ செலவை தொழிற்சாலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். தற்போது கிஷோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உறுதிப்படுத்தியதையடுத்து சகத் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்திய பேருந்தை மப்பேடு போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.