முதலாவது ஆவடி புத்தகத் திருவிழாவில் “தமிழே எங்கள் ஞானச் செருக்கு” என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிஞர் ஜோ.மல்லூரி கருத்துரை

பதிவு:2023-03-22 09:41:39



முதலாவது ஆவடி புத்தகத் திருவிழாவில் “தமிழே எங்கள் ஞானச் செருக்கு” என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிஞர் ஜோ.மல்லூரி கருத்துரை

முதலாவது ஆவடி புத்தகத் திருவிழாவில் “தமிழே எங்கள் ஞானச் செருக்கு” என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிஞர் ஜோ.மல்லூரி கருத்துரை

திருவள்ளூர் மார்ச் 22 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ர்ஏகு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா – 2023 மற்றும்; ”ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 5-ம் நாள் நிகழ்ச்சியில் “தமிழே எங்கள் ஞானச் செருக்கு” என்ற தலைப்பில் எழுத்தாளர் கவிஞர் ஜோ.மல்லூரி மற்றும் “படித்ததில் பிடித்தது” என்ற தலைப்பில் சொல்லரசி கவிதா ஜவஹர் கருத்துரை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிய மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். மேலும் அக்கண்காட்சி அரங்கை ஏராளமான மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து, இப்புத்தகத் திருவிழாவின் 5-ம் நாளில் அமைக்கப்பட்ட புத்தக அரங்குகளை ஏராளமான மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஆகியோர் பார்வையிட்டு, புத்தக அரங்குகளில் புத்தகங்களை கொள்முதல் செய்தனர்.

மேலும், இன்று ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியின் 5-ம் நாளில் பல்வேறு துறைகள் சார்பாக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் பார்வையிட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் தெரிந்து கொண்டனர்.

இரண்டு நாட்களில் சுமார் 7000-ம் புத்தக வாசிப்பாளர்கள் இப்புத்தக திருவிழாவிற்கு வருகை தந்துள்ளனர். அதில் 6 இலட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திருவள்ளூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அரசி ஸ்ரீவத்சன், பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் செந்தில் குமார், சிறுவர், சிறுமியர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.