திருமழிசை குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாள் தேரோட்டம்

பதிவு:2023-04-01 23:17:39



திருமழிசை குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாள் தேரோட்டம்

திருமழிசை குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 7-ம் நாள் தேரோட்டம்

திருவள்ளூர் ஏப் 01 : பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமந்துள்ளது அருள்மிகு குளிர்ந்த நாயகி உடனுறை அருள்மிகு அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 13 நாட்கள் நடைபெறுகிறது. இந்தப் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முன்னதாக 25-ம் தேதி விநாயகர் உற்சவம் நடைபெற்றது.

26-ந் தேதி காலை கொடியேற்றமும், மாலை சிறிய மங்களகிரி உற்சவமும் நடைபெற்றது. 27-ந் தேதி காலை சூரிய விருத்தமும், மாலை சந்திர விருத்தமும், 28-ந் தேதி காலை மங்கள கிரி உற்சவமும், மாலை சிம்மவாகன உற்சவமும், 29-ந் தேதி காலை சிவிகை உற்சவமும், மாலை நாக வாகன உற்சவமும், 30-ந் தேதி காலை ஸ்ரீஅதிகார நந்தி சேவையும், மாலை ரஷப வாகன சேவையும், 31-ந் தேதி காலை தொட்ட உற்சவமும், மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரில் சுவாமி எழுந்தருளிய பிறகு தேரோட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளுதலும், இரவு 8 மணிக்கு மேல் வசந்த மண்டபத்திலிருந்து கோவிலுக்கு எழுந்தருளுதலும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து (2-ந் தேதி) மாலை ஊணாங்கொடி சேவையும், இரவு குதிரை வாகன உற்சவமும், 3-ந் தேதி காலை சிவிகை உற்சவமும், மாலை விமான உற்சவமும், 4-ந் தேதி காலை ஸ்ரீநடராஜர் தரிசனமும், பகல் தீர்த்தம் கொட்டி உற்சவமும், மாலை திருக்கல்யாணமும், இரவு ஸ்ரீபஞ்சமூர்த்திகள் உற்சவமும், இரவு ஸ்ரீசண்டேஸ்வரர் உற்சவமும், 5-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், ஸ்ரீ பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும், 6-ந் தேதி காலை ஸ்ரீ உமாமகேஸ்வரர் தரிசனமும், இரவு தெப்ப உற்சவமும், ஸ்ரீ சந்திரசேகர் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் , 7-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும் ஸ்ரீசுப்பிரமணியர் எழுந்தருளுதல் மற்றும் ஸ்ரீ பஞ்ச மூர்த்திகள் ஆஸ்தானப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.