பதிவு:2023-04-24 14:51:16
திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 26-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைத்திய வீரராகவப் பெருமால் கோவிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவம் வரும் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அதன் படி வருகிற 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், 6 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 9.30 மணிக்கு பக்தி உலாவும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 27-ந் தேதி காலை ஹம்சவாகனத்தில் 5 மணிக்கு வீதி புறப்பாடும் 8 மணிக்கு பக்தி உலாவும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
28-ந் தேதி காலை 4 மணிக்கு கருட சேவை, கோபுர தரிசனமும், மாலை 5.30 மணிக்கு திருவீதி புறப்பாடும், 7.30 மணிக்கு ஹனுமந்த வாஹனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 5 மணிக்கு சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன புறப்பாடுநிகழ்ச்சியும் நடைபெறுகிறது.30-ந் தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை 7 மணிக்கு யாளி வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
அதே போல் வருகிற மே மாதம் 1-ந் தேதி காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும் மாலை 5 மணிக்கு வெள்ளி சப்பரமும், இரவு 7 மணிக்கு யானை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. 2-ந் தேதி காலை 4.45 மணிக்கு திருத்தேருக்கு பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும் இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு பெருமாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
3-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும்7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 4-ந் தேதி 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 5-ந் தேதி காலை 9 மணிக்கு த்வாதசாராதனமும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்து வருகின்றனர்.