அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை பென்னலூர் பேட்டை பயிற்சி சப் இன்ஸ்பெக்டரை நடிகர் தாடி பாலாஜி நேரில் வாழ்த்து தெரிவித்த பின் பேட்டி

பதிவு:2023-04-24 15:11:36



அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை பென்னலூர் பேட்டை பயிற்சி சப் இன்ஸ்பெக்டரை நடிகர் தாடி பாலாஜி நேரில் வாழ்த்து தெரிவித்த பின் பேட்டி

அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை பென்னலூர் பேட்டை பயிற்சி சப் இன்ஸ்பெக்டரை நடிகர் தாடி பாலாஜி நேரில் வாழ்த்து தெரிவித்த பின் பேட்டி

திருவள்ளூர் ஏப் 24 : திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை திடிர் நகர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் குழந்தைகளை அரசு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பென்னலூர் பேட்டை பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் பரமசிவனிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்ற பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் அப்பகுதி மக்களிடம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறும் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழந்தைகளுக்கு செய்து வருவதாகவும் காலை உணவு மதிய உணவு என அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து தன்னை தொடர்பு கொண்டால் குழந்தைகளின் படிப்பிற்காக எந்த உதவி வேண்டுமானாலும் யார் காலில் விழுந்தாவது செய்து தருகிறேன் என பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சப் இன்ஸ்பெக்டருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து பென்னலூர் பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக வந்து பயிற்சி சப் இன்ஸ்பெக்டரை நேரில் சந்தித்து மாலை மற்றும் சால்வை அணிவித்து நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தாடி பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களில் எந்த நேரமும் தொடர்பு கொண்டாலும் தன் பங்கு இருக்கும் எனவும். சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களில் தற்போது வந்துள்ள செல்வராகவனின் பகாசூரன் படமும் சாட்டை, விடுதலை போன்ற திரைப்படங்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழநாடு அரசு காவல்துறைக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. அவர்களது குறைகளை குறைந்த காலத்தில் விரைந்து முடிப்பார்கள். விடுதலை படத்தில் சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரம் தனக்கு பிடித்திருந்ததால் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் எனவும் தெரிவித்தார். விரைவில் அதுபோன்ற வாய்ப்பு தனக்கு கிடைக்கும் போது அதை சரியாக பயன்படுத்துவேன். நடிகரில் தனக்கு நாகேஷும் நடிகையில் தனக்கு நயன்தாராவும் பிடிக்கும். தற்போது வேறு பணிக்காக நடிக்கவில்லை. அரசியலில் தனக்கு விருப்பமுள்ளது. விரைவில் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் தெரிவித்தார்.