திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு:2023-05-02 12:37:01



திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவள்ளூர் மே 02 : திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று கருட சேவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஶ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

அதன் படி கடந்த 26 ஆம் தேதி விடியற்காலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், காலை 6 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது. இந்நிலையில் 9.30 மணிக்கு பக்தி உலாவும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று 27 ந் தேதி காலை ஹம்சவாகனத்தில் 5 மணிக்கு வீதி புறப்பாடும் 8 மணிக்கு பக்தி உலாவும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும் இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை நிகழ்ச்சி நடைபெற்றது இன்று 28 ந் தேதி காலை கருட சேவை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோபுர தரிசனமும், மாலை 5.30 மணிக்கு திருவீதி புறப்பாடும், 7.30 மணிக்கு ஹனுமந்த வாஹனம் புறப்பாடு நிகழ்ச்சியும், 29 ந் தேதி காலை 5 மணிக்கு சேஷ வாகனம் பரமபதநாதன் திருக்கோலமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன புறப்பாடுநிகழ்ச்சியும், 30 ந் தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், மாலை 7 மணிக்கு யாளி வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதே போல் மே மாதம் 1 ந் தேதி காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலமும், சூர்ணாபிஷேகமும் மாலை 5 மணிக்கு வெள்ளி சப்பரமும், இரவு 7 மணிக்கு யானை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இன்று 2 ந் தேதி காலை 4.45 மணிக்கு திருத்தேருக்கு பெருமாள் எழுந்தருளுதலும், 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடும் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு பெருமாள் எழுந்தருளுதலும் நடைபெறுகிறது. நாளை 3 ந் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும்7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 4 ந் தேதி விடியற்காலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான நிகழ்ச்சியும், 5 ந் தேதி காலை 9 மணிக்கு த்வாதசாராதனமும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.