திருவள்ளூர் நகர கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு : மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் மருந்து கடையில் நடந்த சம்பவத்தால் பொது மக்கள் அதிர்ச்சி :

பதிவு:2023-05-05 17:14:16



திருவள்ளூர் நகர கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு : மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் மருந்து கடையில் நடந்த சம்பவத்தால் பொது மக்கள் அதிர்ச்சி :

திருவள்ளூர் நகர கவுன்சிலர் மகனுக்கு அரிவாள் வெட்டு : மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரில் மருந்து கடையில் நடந்த சம்பவத்தால் பொது மக்கள் அதிர்ச்சி :

திருவள்ளூர் மே 05 : திருவள்ளூர் நகர மன்ற 16-வது வார்டு உறுப்பினராக இருப்பவர் இந்திரா பரசுராமன். திமுக பிரமுகரான இவரது மகன் கலைவாணன் (32). இவர் திருவள்ளூர் நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். கலைவாணன் திருவள்ளூர் நகரில் சாமியானா பந்தல், சேர், டேபிள், சமையல் பாத்திரங்கள் வாடகைக்கு கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். மெட் ஜோன் என்ற மருந்துகடையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரது உறவுக்காரரான லோகநாதன் மகன் சரவணன்(21) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆகாஷ்-உடன் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆகாஷ் போன்றவர்களுடன் சேரக்கூடாது என்பதற்காக தனது கடைகளில் சரவணனை வேலைக்கு சேர்த்து பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆகாஷ் என்பவர் அடிக்கடி கடைக்கு வந்து சரவணனை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. அப்போது கலைவாணன் கடைக்கு வந்து சரவணனை கூப்பிடக்கூடாது என எச்சரித்து அனுப்பியுள்ளார். இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார் கலைவாணன்.

இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் கலைவாணன் வீட்டிலிருந்து வெளியே வந்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எதிரே கலைவாணன் நடத்தி வரும் மெட்ஜோன் மருந்தகத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆகாஷ் மற்றும் சந்தோஷ், பிராங்க்ளின், தேவா , சிட்டு, லிப்டிக் அஜித் ஆகியோர் மருந்தகத்திற்குள் புகுந்து கலைவாணனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கலைவாணனை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தலை, கை கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளதால் முதல் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் டவுன் போலீசார் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ், சந்தோஷ், பிராங்க்ளின், தேவா, சிட்டு, லிப்ஸ்டிக் அஜீத் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.