பதிவு:2023-05-14 19:20:32
திருவள்ளூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4162 வழக்குகளுக்கு ரூபாய் 19 கோடியே 99 லட்சத்து 42 ஆயிரத்து 019-க்கு தீர்வு :
திருவள்ளூர் மே 13 : தேசிய மக்கள் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்றது. இம்மக்கள் நீதிமன்றம் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அளித்த உத்தரவு மற்றும் வழிக்காட்டுதலின் பேரில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்தூர், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் தாலுக்கா நீதிமன்றங்களில் நடைபெற்றது.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள உரிமையியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், காசோலை வழக்குகள் குற்றவியல் வழக்குகள் மற்றும் நிலுவையில் அல்லாத வங்கி வழக்குகள் சமரசம் பேசி முடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
திருவள்ளூரில் இன்று நடைபெற்ற விழாவில் தேசிய மக்கள் நீதிமன்றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.செல்வ சுந்தரி துவக்கி வைத்தார். இந்நிகழச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதியும் மற்றும் மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி, குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி வித்யா, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.வேலாராஸ்,மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி பி.வி.சாண்டில்யன், முதன்மை மாவட்ட முன்சீப் நீதிபதி பிரியா, குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவர்கள் முகழாம்பிகை, சத்தியநாராயணன், செல்வ அரசி, பவித்ரா, மூத்த வழக்கறிஞர் டி.சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள். வங்கி அலுவலர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இம்மக்கள் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள 7460 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 4020 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.18 கோடியே 62 லட்சத்து 84 ஆயிரத்து 980 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. நிலுவையில் அல்லாத 142 வழக்குகள் தொகைக்கு தீர்வு காணப்பட்டது.சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 142 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.1 கோடியே 36 லட்சத்து 57 ஆயிரத்து 039 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.இதன்படி மொத்தம் 7602 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுக்கப்பட்டு 4162 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.19 கோடியே 99 லட்சத்து 42 ஆயிரத்து 019 தொகைக்கு தீர்வு காணப்பட்டது.