பதிவு:2023-05-17 12:45:46
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல் துணை ஆய்வாளர்கள் பணிக்கு இலவச பயிற்சி வகுப்பு : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல் துணை ஆய்வாளர்கள் – 621 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி மட்டுமே. இத்தேர்விற்கு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்நத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் tnusrb.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான நாள் 01.06.2023 முதல் 30.06.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவுள்ள பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக 17.05.2023 முதல் இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை தெரிவிக்க வேண்டும்.இவ்விலவச பயிற்சி வகுப்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கற்போர் வட்ட மையத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 044-27660250, 6382433046 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.