திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி 526 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-04-29 22:17:34



திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி 526 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் 1 ம் தேதி 526 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் ஏப் 29 : திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2022 அன்று கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. கோடை வெப்பம் தாக்கத்தின் காரணமாக கிராம சபைக் கூட்டம் காலை 10 மணியளவில் நடைபெறும்.மே 1 (தொழிலாளர் தினம்) அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப்பொருட்கள்,வரவு செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்படும்.

ஊராட்சிகளின் 2021-22-ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, ஒன்றிய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இவ்வாறு நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறும்,பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.