திருவள்ளூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2023-05-30 10:33:02



திருவள்ளூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் மே 30 : பொதுமக்களுக்கு தரமான பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய அம்சமாக தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் www.foodsafety.tn.gov.in என்னும் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் உணவு பாதுகாப்புத் துறையைப் பற்றிய அலுவலர்கள் தொடர்பு எண்கள், சேவைகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த இணைய இணைப்புகள்; குறிப்பாக பதிவு மற்றும் உரிமம் விண்ணப்பித்தல், உணவு கலப்படங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புத்தகங்கள். உணவின் தரம் தொடர்பான புகார் வசதிகள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் அதன் விதிகள், விதிமுறைகள் 2011 போன்ற அனைத்துத் தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும். உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய 9444042322 என்ற வாட்ஸ்அப் புகார் எண் 2017 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் முலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக தற்போது இணையதளம் ( foodsafety.tn.gov.in ) மற்றும் கைபேசி செயலி( TN foodsafety consumer App) அறிமுகபடுத்துப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதனை பயன்படுத்த படிக்க தெரிந்தால் மட்டும் போதும் எழுதுவேண்டிய அல்லது டைப் செய்ய வேண்டிய அவசியமில்லை. புகார் விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் எளிமையான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் இருமொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன் ரீடர் அணுகல் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்ஸி பதிவிறக்கம் செய்யலாம். புதிவிறக்கம் செய்ய இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அல்லது இணையதளத்தில் சேவைகள் என்ற தலைப்பில் குறைதீர்ப்பு என்ற பகுதியில்; சென்றும் நேரடியாகப திவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Android பயனாளர்கள்- https://play.google.com/store/apps/details?id=com.fsopublicapp&pli=1

iOS பயனாளர்கள்- https://apps.apple.com/by/app/tn-food-safety-consumer-app/id1565948095

மேலும், உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் TN Food safety Consumer App (நுகர்வோர் குறை தீர்ப்பு செயலி). சுருஊழு (பயண்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறுபயன்பாடு), உணவு செறிவட்டல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்விழிப்புணர்வு குறும்படங்களை,பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் லிங்கட்இன், யூடியூப் போன்ற சமுக வலைதளம் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.