ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களின் சடலத்தை சக நண்பர்கள் கொட்டும் மழையிலும் சுமந்து சென்று கிரிக்கெட் பேட், பால் கோப்பை வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம்

பதிவு:2023-05-31 22:40:45



ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களின் சடலத்தை சக நண்பர்கள் கொட்டும் மழையிலும் சுமந்து சென்று கிரிக்கெட் பேட், பால் கோப்பை வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம்

ஏரியில் மூழ்கி  உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களின் சடலத்தை சக நண்பர்கள் கொட்டும் மழையிலும் சுமந்து சென்று கிரிக்கெட் பேட், பால் கோப்பை  வைத்து கண்ணீர் மல்க நல்லடக்கம்

திருவள்ளூர் மே 31 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி சிறுவர்கள் 10-ம் வகுப்பு தேர்வு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்த வெற்றிவேல் (15 ) தினேஷ்குமார் (14) உள்பட 7 சிறுவர்கள் நேற்று முன் தினம் (29-ந் தேதி) வயலூர் ஏரியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வெற்றிவேல் (15),தினேஷ்குமார் (14) இருவருக்கும் நீச்சல் தெரியாததால் ஏரியின் ஆழமான பகுதியில் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.. இதனையடுத்து சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்கள் தினேஷ்குமார் வெற்றிவேல் இருவரையும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதலுதவி அளித்துள்ளனர்.

ஆனால் நீண்ட நேரம் சேற்றில் சிக்கியதால் சிறுவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மப்பேடு போலீசார் உயிரிழந்த இரு சிறுவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின் அவர்களின் சொந்த கிராமமான வயலூர் கிராமத்தில் பொதுமக்கள் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.இதனையடுத்து உயிரிழந்த பள்ளி சிறுவர்கள் உடலுக்கு திருவள்ளுர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கினார்.

முன்னதாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் வைக்கப்பட்ட இரு சிறுவர்களின் உடலுக்கு அரசு சார்பாக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் திருவள்ளுர் தாசில்தார் மதியழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவர்களின் குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கினார். உயிரிழந்த பள்ளி சிறுவர்கள் இருவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் குடும்பத்திற்கு அரசு போதிய நிவாரண நிதி அளித்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனையடுத்து உயிரிழந்த இரு பள்ளி சிறுவர்களும் இளம் கிரிக்கெட் வீரர்கள் என்பதால் நேற்று மாலை அவர்களின் உடல்கள் மீது கிரிக்கெட் பேட் பால் மற்றும் கிரிக்கெட்டில் வெற்றி பெற்று வைத்திருந்த கோப்பையை வைத்து சக நண்பர்கள், கிராமத்து இளைஞர்கள் இறுதி ஊர்வலமாக தோளில் சுமந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்ணீர் மல்க நல்லடக்கம் செய்தனர். இறந்த 2 சிறுவர்களுக்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு நல்லடக்கம் செய்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.