மணல் குவாரி செயல்படுத்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

பதிவு:2023-06-15 22:06:34



திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களின் வசதிக்காக மணல் குவாரி செயல்படுத்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு :

மணல் குவாரி செயல்படுத்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

திருவள்ளூர் ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு அரசு குவாரி செயல்பட்டு வருகிறது.ஆனால் பொதுமக்கள் தாங்கள் கட்டும் வீடுகளுக்கு மணல், சவுடு மண் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இந்நிலையில் செங்குன்றம் சுற்றுவட்டார லாரி உரிமையாளற்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.

லாரி உரிமையாளர்கள் சங்கஙகளின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தலைமையில் சங்க நிர்வாகிகள் எஸ்.காமராஜ், ஆர்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.கணேசன் உள்பட லாரி உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.அந்த மனுவில், திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக ரீதியாக தயார் நிலையில் உள்ள சவுடு மண், கிராவல் கோரையை உடனடியாக திறந்து இதனை நம்பியுள்ள 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

அக்கரம்பாக்கம் குவாரி வணிக ரீதியாக செயல்பட்டு வந்த நிலையில் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடைபெற்ற குற்றச் சம்பவத்தால் குவாரி தடை செய்யப்பட்டதால் அதனை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும்.பொது மக்களின் வசதிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் வணிக ரீதியாக சவுடு மண் கிராவல் குவாரியை பரவலாக திறந்து போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குன்றம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.