பதிவு:2023-06-27 23:33:44
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 314 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 94 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 43 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 16 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 25 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 136 மனுக்களும் என மொத்தம் 314 மனுக்கள் பெறப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், முட நீக்கு வல்லுநர் ப்ரீத்தா, சைகை மொழிபெயர்ப்பாளர் சசிகலா, மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.