பதிவு:2023-07-05 23:36:34
திருவள்ளூரில் நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள்
திருவள்ளூர் ஜூலை 05 : இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தல், 2024 முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கும் பொருட்டு முதல் நிலை சரிபார்ப்புப் பணி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மேற்படி கிடங்கினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில்,திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களால் திறக்கப்பட்டு, முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தியதேர்தல் ஆணையத்தினால் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட சுவார்ன் சிங், லடாக்,மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தில் பிரிவு அலுவலராகப் பணிபுரியும் விக்ரம் கான்,ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்பு கிடங்கிற்கு வருகை புரிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடர்பாகதி/ள். பெல் நிறுவன மென்பொறியாளர்களுடன் பல்வேறு சந்தேகங்களை கேட்டு விரிவாக ஆய்வு மேற்கொண்டு,பின்னர் இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
மேலும்,திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் மேற்பார்வையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல்நிலை சரிபார்ப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.