திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2023-07-05 23:45:44



திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் ஜூலை 05 : தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் (மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் செய்திக்குறிப்பு எண் 988, நாள் 30.10.2022) தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு“ எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக“ கொண்டாடப்படும் என அறிவிக்கப்பெற்றது.

அதனடிப்படையில், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி, போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000, இரண்டாம் பரிசு ரூ.7000 மூன்றாம் பரிசு ரூ.5000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கபெறவுள்ளன.

அவ்வகையில், திருவள்ளுர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 11.07.2023 அன்று காலை 9.00 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கம் - 2, மக்கள் குறைதீர்வுக் கூட்ட அரங்குகளில் நடைபெறவுள்ளன.

இதில் கட்டுரைப் போட்டிக்கு தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பிலும்,பேச்சுப்போட்டிக்கு தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடைபெற உள்ளது.

அப்போட்டிகளுக்கு திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பப்பெற்றுள்ளது.முதற்கட்டமாக அவரவர் பள்ளிகளில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி தகுதி பெற்ற மாணவர்களைத் தெரிவு செய்து மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க ஒரு போட்டிக்கு ஒருவர் என ஒரு பள்ளிக்கு 2 பேர் வீதம் அனுப்பி வைக்குமாறும், திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.