அதிகத்தூரில் வீட்டில் குளியல் அறையில் செல்போன் வைத்து வீடியோ எடுக்க முயன்றவரை தட்டி கேட்ட பெண்ணுக்கு சரமாரி அடி

பதிவு:2023-07-15 14:52:13



அதிகத்தூரில் வீட்டில் குளியல் அறையில் செல்போன் வைத்து வீடியோ எடுக்க முயன்றவரை தட்டி கேட்ட பெண்ணுக்கு சரமாரி அடி

அதிகத்தூரில் வீட்டில் குளியல் அறையில் செல்போன் வைத்து வீடியோ எடுக்க முயன்றவரை தட்டி கேட்ட பெண்ணுக்கு சரமாரி அடி

திருவள்ளூர் ஜூலை 15 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமு மூர்த்தி. இவரது மனைவிஆஷா (39) . இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஷா வீட்டின் குளியல் அறையில் காலை குளிக்க சென்றுள்ளார்.

அப்போது குளியலறை ஜன்னலில் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் அந்த செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.அந்த செல்போன் ஆஷா வீட்டுக்கு எதிர் வீட்டை சேர்ந்த குமார் மகன் ஹரிஹரன் என்கிற வசந்த் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இதையடுத்து ஆஷா அங்கு சென்று கேட்டபோது ஹரிஹரன் என்கிற வசந்த் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் வயிற்றில் எட்டி உதைத்தும் தகராறில் ஈடுபட்டுள்ளார். தனது வீட்டு குளியல் அறையில் செல்போன் வைத்து வீடியோ எடுக்க முயன்ற நபரை தட்டி கேட்டதற்கு தாக்கிய ஹரிஹரன் என்கிற வசந்த் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆஷா கடம்பத்தூர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிகரன் என்கிற வசந்த் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் பதிவு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை தேடி வருகின்றனர்