கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் சிலை வைக்க வேண்டும் : ஒன்றிய குழு கூட்டத்தில் பாமக திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன் கோரிக்கை

பதிவு:2023-07-30 22:07:57



கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் சிலை வைக்க வேண்டும் : ஒன்றிய குழு கூட்டத்தில் பாமக திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன் கோரிக்கை

கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் சிலை வைக்க வேண்டும் : ஒன்றிய குழு கூட்டத்தில் பாமக திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன் கோரிக்கை

திருவள்ளூர் ஜூலை 29 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுஜாதா சுதாகர் தலைமை வகித்தார். ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன் , வசந்தா, மேலாளர் (நிர்வாகம்) மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.திராவிட பக்தன், பாமக திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், பா.யோகநாதன், எஸ்.ராணி, வி.எம்.சுரேஷ், கோ.ஹரிதரன், டியாமினி, பி.பூங்கோதை, மூ.நரேஷ்குமார், பா.தரணி, வி.கோவிந்தம்மாள், எஸ்.பிரசாந்த், சி.தயாளன், பா.சுபப்பிரியா சக்திதாஸ், பா.சுமதி, ஆர்.கார்த்திகேயன், மு.நீலாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.இக்கோரிக்கையை பாமக உட்பட அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் வரவேற்றனர்.

இதற்கு பதிலளித்த ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுஜாதா சுதாகர், கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் சிலை வைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து, அதற்கான ஆணை வந்த பிறகு கடம்பத்தூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கரின் சிலை வைக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.