பதிவு:2023-08-15 12:08:29
திருத்தணி முருகன் கோயிலில் 11 நாட்களில் பக்தர்கள் 2 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் 345 கிராம் தங்கம், 13 ஆயிரத்து 12 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கை
திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்
அதே போல் ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.
அதேபோல் திருத்தணி உபகோயில்களிலும் கடந்த 11 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய உண்டியல் காணிக்கை திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 8 நாட்களில் 2 கோடியே 17 லட்சத்து 97 ஆயிரத்து 512 ரூபாயும், மற்றும் 345 கிராம் தங்கம், 13 ஆயிரத்து 012 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.