பதிவு:2023-08-26 14:23:00
திருவள்ளூரில் தொழில் கடன் முகாமில் 8 குறு, சிறு தொழில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.42 கோடி மதிப்பீட்டில் தொழில் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் ஆக 26 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் நடைபெற்ற தொழில் கடன் முகாமில் 8 குறு, சிறு தொழில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7.42 கோடி மதிப்பீட்டில் தொழில் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். அதனை தொடர்ந்து குறு, சிறு தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் என ரூ.26.70 கோடிக்கான 20 கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அக்கடன் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள நபர்களுக்கு தேவையான கடன் உதவிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தி பேசினார்.
திருவள்ளுவர் மாவட்டம் என்பது தமிழகத்தின் மாநில ஜி.டி.பியில் மிகப்பெரிய பங்களிப்பு உள்ள மாவட்டமாகும். அதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருப்பவர்கள் தொழிற் முனைவோர்களாகிய நீங்கள் தான். தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப் படுத்துவதற்கும், பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கி வருகிறது.மேலும், திருவள்ளூர் கிளை அலுவலகமான 86, சி & டி, 2வது பிரதான சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் விழா வருகிற 01.09.2023 வரை நடைபெறுகிறது.
இச்சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள்,மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் மாநில அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு, தமிழக அரசின் 25% முதலீட்டு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ. 150 இலட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இந்த முகாமில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும் எனவே இதனை அனைவரும் முழுமையாக பயன்படுத்தி, பயனடையுமாறு என ஆட்சியர் தெரிவித்தார்.
முகாமில் தமிழ்நாடு முதலீட்டு கழக துணை பொது மேலாளர் ஆர்.ஜெ.ரமேஷ், முதன்மை மண்டல மேலாளர் ஆர்.பழனிவேல், திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சேகர், தமிழ்நாடு முதலீட்டு கழக திருவள்ளூர் கிளை மேலாளர் பி.ஜி.அசோக், திருவள்ளூர் மாவட்ட தொழில் கூட்டமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.