திருவள்ளூரில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் இரண்டாம் கட்ட தூய்மைப் பணிகள் துவக்க விழாவில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் துவக்கி வைத்தார்

பதிவு:2023-09-25 20:21:52



திருவள்ளூரில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் இரண்டாம் கட்ட தூய்மைப் பணிகள் துவக்க விழாவில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் துவக்கி வைத்தார்

திருவள்ளூரில்

திருவள்ளூர் செப் 24 : ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் வாயிலாக பொது மக்களிடையே பல்வேறு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி பொதுமக்களுடைய சுகாதார முன்னேற்றத்தின் மனமாற்றம் மற்றும் நடத்தை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் "நம்ம ஊரு சூப்பர்" கடந்த மே மாதம் முதல் ஜூன் 23 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பொது மக்களுடைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 23.09.2023 முதல் 09.12.2023 வரையிலான காலத்தில் ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4ம் சனிக்கிழமைகளில் பொது இடங்களில் பெருமளவில் தூய்மை பணியில் மேற்கொள்ளுதல், நலவாழ்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தூய்மை காவலர்கள் மற்றும் இதர துப்புரவு பணியாளர்களுக்கு ஏற்படுத்துதல், பசுமை மற்றும் தூய்மை கிராமங்களை உருவாக்குதல், மகளிர் குழுக்கள் மூலம் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நெகிழி பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் நெகிழிக்கு மாற்று பொருள்களை உபயோகப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை ஊரக வளர்ச்சித் துறை மகளிர் மேம்பாட்டு திட்டம், கல்வித்துறை, பொது சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை ஆகிய துறைகளுடன் இணைந்து சுகாதாரம் மற்றும் குடிநீர் வேளாண்மை பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள "தூய்மை திருவள்ளூர்" நிலையினை தக்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை பல்வேறு துறைகளோடு இணைந்து சுகாதாரம் மற்றும் குடிநீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி "தூய்மை திருவள்ளூர்" நிலையினை தக்க வைக்கும் பொருட்டு, சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்காக செயல்படுத்தப்படும் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் இரண்டாம் கட்ட தூய்மைப் பணிகள் துவக்க விழாவில் சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் துவக்கி வைத்தார்.

முன்னதாக சுற்றுப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் தூய்மை பணி மேற்கொள்ளும் பொருட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரூபேஷ், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் திரு.சுரேந்திரஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.