திருவள்ளூர் அருகே தலையணையால் அமுக்கி கணவனை கொலை செய்த பாசக்கார மனைவி கைது : மயங்கிய நிலையில் கணவன் இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

பதிவு:2023-09-25 20:34:51



திருவள்ளூர் அருகே தலையணையால் அமுக்கி கணவனை கொலை செய்த பாசக்கார மனைவி கைது : மயங்கிய நிலையில் கணவன் இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

திருவள்ளூர் அருகே தலையணையால் அமுக்கி கணவனை கொலை செய்த பாசக்கார மனைவி கைது : மயங்கிய நிலையில் கணவன் இறந்ததாக நாடகமாடியது விசாரணையில் அம்பலம்

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அடுத்த வானியன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். சென்னை வியாசர்பாடியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ் கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 11-ஆம் தேதி ரமேஷ் கட்டிலில் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு 108ஆம்புலன்சுக்கு அளிக்கப்பட தகவலின்பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரமேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து வெங்கல் போலீசார் கட்டிலில் மயங்கிய நிலையில் உயிரிழந்த ரமேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு ரமேஷின் தந்தை ரவியிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ரமேஷின் தந்தை ரவி இந்த மகன் சாவில் மர்மம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து வெங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் ரமேஷ் மூச்சடைத்து உயிரிழந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷின் குடும்பத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். ரமேஷின் மனைவி தங்கலட்சுமியிடம் கிடுக்கு பிடி விசாரணையை முடுக்கி விட்டனர்.

அப்போது, கணவர் ரமேஷ் மதுபோதையில் தம்மை தொந்தரவு செய்து வந்ததாகவும், பிறருடன் பேசுவதை சந்தேகப்பட்டு சண்டையிட்டதாகவும், வேலைக்கு போகாமல் தொடர்ந்து சண்டை போட்டு வந்ததால் ஆத்திரத்தில் கணவர் ரமேஷ் போதையில் தூங்கி கொண்டிருந்த போது தலையணையை கொண்டு முகத்தில் அமுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கணவனை கொலை செய்து மயங்கிய நிலையில் இறந்ததாக நாடகமாடிய பாசக்கார மனைவியை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.