திருவள்ளூர் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி விழுந்த 60 வயது முதியவர் பலி :

பதிவு:2023-10-30 21:53:13



திருவள்ளூர் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி விழுந்த 60 வயது முதியவர் பலி :

திருவள்ளூர் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது தவறி விழுந்த 60 வயது முதியவர் பலி :

திருவள்ளூர் அக் 30 : திருவள்ளூர் பத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ரவி (60). கூலித் தொழிலாளியான இவரது மனைவி வேளாங்கன்னி. இவர் நேற்று எம் சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரில் ஓட்டுனர் அருகில் உட்கார்ந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் திருவள்ளூரிலிருந்து காக்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ஈக்காடு அருகே வளைவில் வேகமாக திரும்பிய போது வேகத்தடை மீது ஏறி இறங்கியதில் தவறி கீழே விழுந்ததில் டிராக்டரின் பின்பக்க டயர் முதியவர் ரவி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே முதியவர் ரவி துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புல்லரம்பாக்கம் போலீசார் ரவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிராக்டரை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டதால் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.