முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :

பதிவு:2023-12-28 15:16:51



முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18 வயது நிரம்பிய பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து 18  வயது நிரம்பிய  பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல் :

திருவள்ளூர் டிச 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் விடுவித்த செய்திக் குறிப்பில், சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திடம் வைப்புத்தொகை ரசீதுகள் பெற்று 18 வயது நிரம்பிய நிலையில் உள்ள பயனாளிகள் முதிர்வுத்தொகை பெறுவதற்கு தங்களைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலத்தில் பணிபுரியும் சமூக நல அலுவலர்களிடம் ஆவணங்களை அளித்து இத்திட்டத்தின் பணப் பயன்களை பெறலாம்.

அதன்படி முதிர்வுத்தொகை பெறுவதற்கு, சேமிப்பு பத்திரத்தின் அசல் மற்றும் நகல்,பத்தாம் வகுப்பு படித்ததற்கான மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்(தாய்,மகள்) கையொப்பத்துடன், ஒரு ரூபாய்க்கான அஞ்சல் வில்லை,வங்கிகணக்கு எண் விவரம் (பாஸ் புக் முதல் பக்க நகல்) ஆகிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (2ம் தளம்), திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி எண் : 044-29896049 என்ற அலுவலக முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.