திருவள்ளூர் மாவட்டத்தில் காதை பிளக்கும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களின் மீது அதிரடி தணிக்கை : ரூ.2.37 லட்சம் வசூல் செய்து நடவடிக்கை :

பதிவு:2022-05-11 12:28:29



திருவள்ளூர் மாவட்டத்தில் காதை பிளக்கும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களின் மீது அதிரடி தணிக்கை : ரூ.2.37 லட்சம் வசூல் செய்து நடவடிக்கை :

திருவள்ளூர் மாவட்டத்தில் காதை பிளக்கும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களின் மீது அதிரடி தணிக்கை : ரூ.2.37 லட்சம் வசூல் செய்து நடவடிக்கை :

திருவள்ளூர் மே 11 : தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையரின் கட்டளைப்படி அனைத்து மாவட்டங்களிலும் ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்கள் மீது தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.இதையொட்டி சென்னை வடக்கு சரக இணை ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம் மற்றும் மோகன் திருவள்ளூர் பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாகனத் தணிக்கை செய்தனர்.

இதில் சுமார் 75 வாகனங்கள் தணிக்கை செய்தது 16 வாகனங்களுக்கு ஏர் ஹாரன் பொருத்தப்பட்டது கண்டறிந்து அதற்கான கட்டணமாக ரூ.2,37,100 நிர்ணயம் செய்து வெளிமாநில வாகனம் ஒன்றுக்கு மட்டும் ரூ.10 ஆயிரம் உடனடி வசூல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் கூறுகையில் அதிக ஒலியெழுப்பும் காற்று ஒலிப்பான்கள் 80 டெசிபலுக்கு மேல் உள்ள வாகனங்களின் மூலம் ஒலி மாசு ஏற்படும்போது பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். பாதசாரிகள் இருசக்கர ஓட்டுனர்கள் திடீரென சத்தம் வரும் போது நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றனர் இதனை தடுப்பதற்காக இதுபோன்ற தணிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது என்றும் இனி வரும் காலங்களில் இவ்வாறு காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்களை தடுத்து நிறுத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.