திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

பதிவு:2024-01-23 22:13:27



திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 370 கோரிக்கை மனுக்கள்  பெறப்பட்டன :

திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 370 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 92 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 68 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 45 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 67 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 98 மனுக்களும் என மொத்தம் 370 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மேலும் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, நலத்திட்டங்களை வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா,மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, சமூக பாதுகாப்புத்திட்ட துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.குணசேகர், துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.