திருவள்ளூர் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் : கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை 3 பேருக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த அரை மணி நேரத்தில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :

பதிவு:2024-01-24 18:33:31



திருவள்ளூர் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் : கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை 3 பேருக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த அரை மணி நேரத்தில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :

திருவள்ளூர் நகராட்சி சார்பில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் : கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை 3 பேருக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பித்த அரை மணி நேரத்தில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார் :

திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிக்குபட்பட்ட பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”சிறப்பு முகாம்கள் கடந்த 3- ஆம் தேதி முதல் வருகிற 23-ஆம் தேதி வரை 13 நாட்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடைசி நாளான இன்று திருவள்ளூர் நகராட்சி 10 முதல் 18 வரை உள்ள 9 வார்டுகளுக்கு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சுபாஷினி முன்னிலை வகித்தார். இதில் வருவாய்த்துறை, நகராட்சி,காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூகநலத்துறை, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தொழிலாளர் நலவாரியம் (சமூகபாதுகாப்புத்திட்டம்) தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, மாவட்ட தொழில் மையம், மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் கண்பார்வையற்ற பெண் ஒருவர் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 3 பேர் பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தனர். அரை மணி நேரத்தில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்.இதில் நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், வட்டாட்சியர் வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.