திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 358 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-01-31 13:23:43



திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 358 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 358 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 358 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில்இ நிலம் சம்பந்தமாக 103 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 78 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 40 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 67 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 70 மனுக்களும் என மொத்தம் 358 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான திருமணநிதி உதவித் தொகைக்கான 8 கிராம் தங்கநாணயம் 3 பயனாளிகளுக்கும் மற்றும் காதுகேளாத மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் போன் 33 பயனாளிகளுக்கு ரூ.4,40,517 மதிப்பில் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணி, பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.