பதிவு:2024-02-05 08:21:39
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் :
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஶ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி தை பிரம்மோற்சவம் இன்று பிப்ரவரி 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் உற்சவர் ஶ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்க உள்ளார். அதன்படி முதல் நாளான இன்று 4-ஆம் தேதி விடியற்காலை 4.30 மணிக்கு கொடியேற்றமும், காலை 5.15 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிம்ம வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இரண்டாம் நாளான 5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு ஹம்சவாகன புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சூர்ய பிரபை புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மூன்றாம் நாளான 6-ஆம் தேதி காலை 5 மணிக்கு கருட சேவையும், 7 மணிக்கு கோபுர தரிசனமும் இரவு 8 மணிக்கு அனுமந்த வாகனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நான்காம் நாளான 7-ஆம் தேதி காலை 7 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும் இரவு 7 மணிக்கு சந்திரப்ரபை புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.. ஐந்தாம் நாளான 8-ஆம் தேதி காலை 5 மணிக்கு நாச்சியார் திருக்கோலம் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாளி வாஹனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
ஆறாம் நாளான 9-ஆம் தேதி தை அமாவாசையான அன்று ரத்ணாங்கி சேவையும், மாலை 3.30 மணிக்கு சூர்ணாபிஷேகமும் இரவு 8.30 மணிக்கு யானை வாகனம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.ஏமாம் நாளான 10-ஆம் தேதி காலை 5. மணிக்கு தேருக்கு எழுந்தருளலும், 7 மணிக்கு தேர் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.. மாலை 6.30 மணிக்கு தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு தேரிலிருந்து கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது..
எட்டாம் நாளான 11-ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு குதிரை வாகன புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாளான 12-ஆம் தேதி காலை 5 மணிக்கு ஆள்மேல் பல்லக்கு புறப்பாடு நிகழ்ச்சியும் 11 மணிக்கு தீர்த்தவாரியும் இரவு 7 மணிக்கு விஜயகோடி விமானம் புறப்பாடு நிகழ்ச்சியும், 9.30 மணிக்கு திருமொழி சாற்றுமுறை ரத்னாங்கி சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.விழாவின் கடைசி நாளான 13-ஆம் தேதி பகல் 12 மணிக்கு த்வாதச ஆராதனம் நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு வெட்டிவேர் சப்பரமும், த்வஜ அவரோஹணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இந்த தை பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.