பதிவு:2024-02-10 20:57:47
திருத்தணி அருகே ஆயத்த ஆடை நிறுவனத்தில் தண்ணீர் குடித்த 50- க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் : திருத்தணி, சோளிங்கர், பீரகுப்பம், வங்கனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை :
திருவள்ளூர் பிப் 09 : திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டையில் ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருத்தணி, ஆர்.கே பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 1200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் உணவு அருந்திவிட்டு தண்ணீர் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் திடீரென நிறுவனத்தில் தண்ணீர் குடித்த பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மயக்கமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருத்தணி பீரகுப்பம் வங்கனூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனையில் மஞ்சுளா (38), பாரதி (38), அமுலு (40), மோகனா (34, சாந்தி (37), வாசுகி (29), சரஸ்வதி(38), சாமுண்டீஸ்வரி, (30) உள்பட 50-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு தண்ணீர் குடித்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.