திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 29 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :

பதிவு:2024-02-25 10:30:16



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 29 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 29 ம் தேதி நடைபெறும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அறிவிப்பு :

திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் 29.02.2024 அன்று காலை 10 மணிக்கு நடத்திட மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கும் தீர்வு காண மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, வங்கிகள் துறை, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேருராட்சி, நகராட்சி, மற்றும் பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் இதர துறை சார்ந்த மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.