பதிவு:2024-02-25 10:42:01
பூண்டி நீர்த்தேக்க பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் பிப் 24 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்க பகுதியான சதுரங்கப்பேட்டை மோவூர் கிராமத்தில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சுற்றுலாத் துறை சார்பில் பூண்டி நீர்த்தேக்க பகுதியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
அப்பொழுது கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் கூறுகையில் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி, பூண்டி அணைக்கட்டு பகுதியில் நீர் விளையாட்டுக்கள், படகு சவாரி, சாகச விளையாட்டுகள் மற்றும் பறவைகளைக் காண பார்வையாளர் மாடம் போன்ற பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு இன்றைய தினம் பூண்டி அணைக்கட்டுப் பகுதியில் சதுரங்கப்பேட்டை, மோவூர் கிராம பகுதியில் துவக்கப்பட்டுள்ளது, இப்பகுதியில் படகு குழாம் அமைத்தல் தவிர்த்து, ஏனைய பணிகளான 1.உணவகம், சமையல் அறை, வரவேற்பு மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கூடிய புதிய நிர்வாக கட்டடம், 2.அணுகுசாலை, உட்புற சாலை உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துமிடம் , 3. மின்னாக்கி வசதிகளுடன் கூடிய மின்பணிகள் போன்ற பணிகளை மொத்த திட்டப்பரப்பான 3.33 ஏக்கர் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ள உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ராஜாராம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி செயற்பொறியாளர் ரமேஷ் பூண்டி நீர்த்தேக்க ஏரி உதவி பொறியாளர் அகிலன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.