பதிவு:2024-03-01 19:18:01
திருவள்ளூரில் மீன்வளத்துறையில் இளநிலை உதவியாளரின் பூட்டிய விட்டில் 15 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மாயம் : போலீசார் விசாரணை :
திருவள்ளூர் மார்ச் 01 : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள திருவாசகம் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் சென்னை மீன்வளத் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ஸ்ரீதர் அதே பகுதியில் ஹார்ட்வேர் கடை வைத்து நடத்தி வருகிறார். விஜயலட்சுமி பணியின் பயிற்சிக்காக சென்றிருக்கிறார். இந்நிலையில் நேற்று ஸ்ரீதர் கடைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டின் கீழ் தளத்தில் அவரது பெற்றோர்கள் வசித்து வருகின்றனர்.
கீழ்தளத்தில் தனது பெற்றோர் வசித்து வருவதால் வீட்டின் மேல் பகுதியில் உள்ள வீட்டு சாவியை ஜன்னல் அருகே வைத்து விட்டு செல்வதாகவும் இந்நிலையில் வீடு பூட்டி இருக்கும் நிலையில் வீட்டுக்குள் இருந்த 30 சவரன் நகையில் 15 சவரன் நகையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தில் 13 ஆயிரம் ரூபாய் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையில் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் குழந்தையை பராமரிக்க ஒரு பெண் வேலைக்கு வந்து செல்வதால் அந்த பெண்ணின் மீது சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.